நாரம்மல விபத்தில் நான்கு மாத்தளை வாலிபர்கள் உடல் நசுங்கி ஸ்தலத்தில் வபாத்-படம் இணைப்பு

சாகீர் ஏ ரஹ்மான்-

நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகியுள்ளனர். இந்த விபத்தில் மாத்தளை வரகாமுறையை சேர்ந்த நான்கு வாலிபர்களே (படங்கள்) வபாத்தாகியுள்ளனர். இவர்களில் இருவர் சகோதரர்களும் ஒருவர் அவர்களின் உறவினருமாவார் . முச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற நாஸிக் என்ற வாலிபர் வரகாமுறை- உக்குவளை பிரதேச சபையின் பிரதி தலைவரான நகீர் என்பவரின் மகனாவார் .


இபோச பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .இவர்கள் 21 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்டவர்கள் ஆவர் . வெளிநாட்டு ஒன்றில் இருந்து நாடு திரும்பிய தனது சகோதரனை அழைத்து வரும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது . விபத்தை அடுத்து பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :