இது அடிப்படையற்ற காட்டிகொடுக்கும் செயலாகும் என்று பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டு யதார்த்தமற்ற ஒன்று என்றும் ஞானசார தேரர் கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள 50 பக்க அறிக்கையில், இலங்கையில் பொதுபலசேனாவே மதப்பிரச்சினையை தூண்டிவிடுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல. பொதுபலசேனாவை பொறுத்தவரையில் ஹலாலை சிங்களவர்களிடம் நடைமுறைப்படுத்துவதையே அது எதிர்க்கிறது.
இந்தக்குற்றச்சாட்டு யதார்த்தமற்ற ஒன்று என்றும் ஞானசார தேரர் கூறியுள்ளார். அமைச்சர் ஹக்கீம் ஐக்கிய நாடுகள் சபைக்கு வழங்கியுள்ள 50 பக்க அறிக்கையில், இலங்கையில் பொதுபலசேனாவே மதப்பிரச்சினையை தூண்டிவிடுகிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் சிறுபான்மையினரை கொடுமைப்படுத்துகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது ஏற்றுக்கொள்ளத்தக்க குற்றச்சாட்டு அல்ல. பொதுபலசேனாவை பொறுத்தவரையில் ஹலாலை சிங்களவர்களிடம் நடைமுறைப்படுத்துவதையே அது எதிர்க்கிறது.
முஸ்லிம்கள் ஹலால் பொருட்களை நுகர்வதை பொதுபலசேனா எதிர்க்கவில்லை. இந்தநிலையில் அமைச்சர் ஹக்கீம் நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

0 comments :
Post a Comment