ஹாசிப் யாஸீன்-
மாகாண சபை தேர்தலுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்றிரவு கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தலைமையில்நடைபெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும், உற்பத்தித் திறன் அபிவிருத்தி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் மேல் மாகாணசபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இப்பிரச்சார பொதுக்கூட்டத்தில் கட்சியின் போராளிகள், ஆதரவாளர்கள் எனபெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)
0 comments :
Post a Comment