மோட்டார் சைக்கிள் விபத்தில் பொத்துவிலைச் சேர்ந்த பாரூக் கரீம்(வயது 33) என்பவர் ஸ்தலத்திலேயே பலி

பொத்துவில் அறுகம்பை பிதான வீதியில் செவ்வாய்க்கிழமை (4) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொத்துவில் இண்டாம் பிரிவைச் சேர்ந்த பாரூக் கரீம்(வயது 33) என்பவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அறுகம்பையிலிருந்து பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையென்றும் முச்சக்கரவண்டியின் சாரதியாக பணியாற்றி வந்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :