மாத்தளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 1உயிரிழந்ததுடன் மூவர் காயம் - படங்கள்

கலேவெல - மாத்தளை வீதியில் (மாதிபொல) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.

கலேவெலயில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் எதிரே வந்த வேனும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ் விபத்தில் நான்கு பேர் பயணித்த முச்சக்கர வண்டியில் வந்த 17 வயது இளைஞன் உயிரிழந்ததுடன் காயமடைந்தவர்கள் மூவரும் மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேன் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதேசவாசி ஒருவரின் தகவல் படி வேன் சாரதி முஸ்லிம் எனவும், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் நான்கு பேரும் சிங்களவர்கள் என அறியக் கிடைத்தது.(ம.வெ)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :