கலேவெல - மாத்தளை வீதியில் (மாதிபொல) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
கலேவெலயில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியும் எதிரே வந்த வேனும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் நான்கு பேர் பயணித்த முச்சக்கர வண்டியில் வந்த 17 வயது இளைஞன் உயிரிழந்ததுடன் காயமடைந்தவர்கள் மூவரும் மாத்தளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேன் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதேசவாசி ஒருவரின் தகவல் படி வேன் சாரதி முஸ்லிம் எனவும், முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் நான்கு பேரும் சிங்களவர்கள் என அறியக் கிடைத்தது.(ம.வெ)





0 comments :
Post a Comment