ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்தை மாற்றியமைக்க அக்கட்சி தீர்மானம்

ஜே.வி.பி.யை முற்றும் முழுதாக மாற்றியமைக்க அக்கட்சியின் அரசியல் சபை தீர்மானித்துள்ளது.

ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பாக இப்போது தீர்க்கமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த மூன்று மாகாண சபைத் தேர்தல்களிலும் ஜே.வி.பி.யின் பின்னடைவுக்கு கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் அனைவரும் பொறுப்புக் கூற வேண்டுமெனவும் அரசியல் சபை தெரிவிக்கின்றது.

இப்போதுள்ள சிரேஷ்ட உறுப்பினர்களைத் தவிர்த்து புதிய முகமொன்றை தலைமைப் பதவிக்கு நியமிக்க வேண்டுமென அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினர்கள் பலர் கருதுகின்றனர்.

அக்டோபர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜே.வி.பி. தலைமையிலும் அரசியல் சபையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் ஜே.வி.பி.வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :