பதவியை இராஜிநாமா செய்யும் யோசனையை கைவிடுவதாகத் செல்வம் தெரிவிப்பு

மிழீழ விடுதலை இயக்கம் டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ். மாவட்டத்தில் சிவாஜிலிங்கத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது.

கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்ட போதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ய உத்தேசித்திருந்தேன்.

ஆனால் எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க மாட்டாது என்று சுட்டிக்காட்டி எனது இராஜிநாமா யோசனையைக் கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டதையடுத்து அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தன்மைமையை உணர்ந்து எனது இராஜிநாமா யோசனையைக் கைவிட்டுள்ளேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :