ஹபரண - திருகோணமலை பிரதான வீதி வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

பரண - திருகோணமலை பிரதான வீதியில் 145 -146ம் கிலோ மீற்றர் பகுதிக்கு இடையில் கல்பொத்த எனுமிடத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று (03) இரவு இடம்பெற்ற இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த கணவன் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த இவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஒரு தம்பதியினரும் அவர்களது மூன்று வயது பெண் பிள்ளையும் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் ஹபரண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :