வட மாகாண முதலமைச்சராக விக்கினேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்

சி.வி. விக்கினேஸ்வரன் வட மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, வடமாகாண அமைச்சர்களுக்கான பதவியேற்பு யாழ்ப்பாணத்தில் சி.வி. சிக்கினேஸ்வரன் முன்னிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.

முதலமைச்சருக்கான பதவியேற்பு நிகழ்வு அலரிமாளிகையில் எதிர்வரும் 7ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் வட மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் நீதி­ய­ரசர் சி.வி. விக்கி­னேஸ்­வரன் ஜனா­தி­பதி முன்­னி­லையில் சத்­தி­ய­ப்பி­ர­மாணம் செய்­வது தொடர்பில் இன்று காலை ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ஜனா­தி­ப­தி­யுடன் காலை நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து முற்பகல் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :