இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவோம் - ஜப்பான்

லங்கையில் பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியை வலுப்படுத்த ஜப்பான் அரசு வழங்கி வரும் உதவியை தொடர்ந்தும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அறிவித்துள்ளது.

ஜப்பானிய அரசின் அழைப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்தார். அதன்படி கடந்த மாதம் 25ம் திகதி முதல் இம்மாதம் 2ம் திகதி வரை தங்கிருந்த அவர் ஜப்பானிய அரசின் உயர் மட்ட அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த மார்ச் மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்துடன் டோக்கியோவில் வைத்து அவர் விடுத்த அழைப்புக்கு அமைய அந்த நாட்டின் உயர்மட்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். அவர்களின் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த பேச்சுவார்த்தைகளின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பொருளாதார அபிவிருத்திக்கு மட்டுமல்லாது மின்சாரம்,மீன்பிடித் தொழில், வீதி நிர்மாணப் பணிகள் உட்பட ஏனைய அபிவிருத்தி பணிகளுக்கு ஜப்பான் வழங்கி வரும் உதவிகள் தொடர்பிலும் பசில் ராஜபக்ச ஜப்பானிய அதிகாரிகளிடம் நன்றி தெரிவித்துள்ளார்

பசில் பிரதி பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், அமைச்சரவையின் பிரதம செயலாளர் உட்பட முக்கியஸ்தர்களை சந்தித்துள்ளதுடன் இலங்கையின் நினைவு பரிசுகளையும் வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :