புலமைப் பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளி எடுத்த தன் மகனுக்கு சூடு வைத்த தந்தை - படங்கள்


 - நஸீப் முஹம்மட் -

டந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையில் குறைந்த புள்ளியை பெற்ற தனது மகனை தீயினால் சுட்ட தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவை கீழ் பிரிவு தோட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த புலமைப்பரிசில் பரீட்சையி;ல் 95 புள்ளிகளை பெற்றதன் காரணமாக புள்ளிகள் பற்றாது எனகூறியே தனது 10வயது மகனை அவரது தந்தை தீயினால் சூடு வைத்துள்ளார்.

பொகவந்தலாவ பொலிசாருக்கு கிடைத்த தகவலின் படி சம்பவம் தொடர்பாக குறித்த சிறுவனின் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த சிறுவனுக்கு கழுத்துப்பகுதியிலும் வலது காலிலும் எறி காயங்களுடன் பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :