சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணித்த 13 சிறுவர்கள், 13 பெண்கள் 46 ஆண்களும் மீட்பு

லங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் படகு பழுதடைந்தமையின் காரணமாக ஆபத்துக்கு முகங்கொடுத்த 70 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் 70 பேரும் பாதுகாப்பான நிலையில் நேற்று (04) காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

தொழிநுட்ப கோளாறு காரணமாக படகு தென்மேற்கு கடற்பரப்பில் 215 கிலோமீற்றர் தொலைவில் பழுதடைந்துள்ளது.

இந்நிலையில் படகில் பயணித்தவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.

இந்த கப்பலில் 13 சிறுவர்கள், 13 பெண்கள் மற்றும் 46 ஆண்களும் பயணித்துள்ளனர்.

படகிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றதடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம், கற்பிட்டியிலிருந்து இவர்கள் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :