அஜீத்தின் போஸ்டரைக் கிழித்ததால் ஏற்பட்ட கைகலப்பில் 9 பேருக்கு காயம்

ஜீத்தின் போஸ்டரைக் கிழித்ததால் ஏற்பட்ட கைகலப்பில் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. 22பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அஜீத் நடித்த ஆரம்பம் படத்தின் போஸ்டர்கள் கும்பகோணத்தில் ஒட்டப்பட்டிருந்தன. இவற்றை யாரோ சிலர் கிழித்தெறிந்துவிட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த அஜீத் ரசிகர்கள், சிலரைக் குறிவைத்து தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சில விஜய் ரசிகர்களும் இருந்ததாகக் கூறுகிறார்கள். இதைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் கைகலப்பு அதிகமானது.

இந்த கைகலப்பில் 9 ரசிகர்கள் காயமடைந்தனர். சம்பவம் அறிந்த கும்பகோணம் போலீசார்,ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் 22 பேரை கைது செய்தனர். 

காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அஜீத் படங்கள் வெளியாகும்போதெல்லாம் ஏதாவது ஒரு ஊரில் இத்தகைய கலாட்டாக்கள் நடப்பது வழக்கமாகி வருகிறது.

இத்தனைக்கும் அவர் மன்றங்களைக் கலைத்துவிட்டது நினைவிருக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :