8வயது மகளின் உடலுறுப்பிற்காக 6 மாதம் காத்திருக்கும் பெற்றோர்


ங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் வசித்து வரும் சீக்கியக் குடும்பம் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்த போது அவர்களின் 8 வயதுப் பெண்ணான குர்கிரனும் முதன்முதலாக இந்தியா வந்திருந்தார்.

அப்போது உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியை அவரது பெற்றோர்கள் பஞ்சாபின் கன்னா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு ஊசிமருந்து செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே குர்கிரன் மரணமடைந்தார். பிரேதப் பரிசோதனைக்குப்பின் அந்தப் பெண்ணின் உடல் அவளது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சிறுமியின் மரணத்தில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் இங்கிலாந்து சென்றவுடன் அங்கு மறுமுறை பிரேதப் பரிசோதனைக்கு அணுகியபோது அவளது உடல் உறுப்புகள் இல்லாதநிலையில் பரிசோதனை செய்ய மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பஞ்சாப் காவல்துறையினரால் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட சிறுமியின் இதயம், நுரையீரல் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகள் மொஹாலியில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த விபரம் தங்களுக்குத் தெரியாது என்று மறுத்த சிறுமியின் குடும்பம் அந்த உறுப்புகளை இங்கிலாந்திற்கு அனுப்புமாறு மனு அளித்தனர். அதன்பின் இந்த உறுப்புகள் முறையே பதப்படுத்தப்பட்ட நிலையில் சென்ற ஞாயிறன்று இங்கிலாந்தில் குர்கிரனின் பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் உடல் உறுப்புகள் இல்லாத நிலையிலேயே அவரது இறுதிச் சடங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்புகளை இங்கிலாந்திற்கு வரவழைக்க அவரது தந்தை 6 லட்ச ரூபாய்க்கும் மேலாக செலவு செய்துள்ளார்.

ஆயினும் இதற்கான செலவை ஏற்க காப்பீட்டு நிறுவனம் மறுத்துவிட்டது. இது உணர்ச்சி மிகுந்த ஒரு போராட்டமாக மாறிவிட்டது என்று சிறுமியின் குடும்ப உறவினர்களில் ஒருவரான ஷரன்ஜித் கவுர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :