வெலிவேரிய சம்வபம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடி நடவடிக்கை

வெலிவேரிய – ரத்துபஸ்வல குடி நீர் பிரச்சினையுடன் தொடர்புடைய தொழிற்சாலையை வேறு இடத்திற்கு மாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது.

அப்போது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூவர் உயிரிழந்துள்ளதோடு 20ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற கலவர நிலை குறித்து ஆராய மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் தலைமையில் விசேட விசாரணை குழுவொன்றை இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :