செப்டம்பர் 01ல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒலுவில் துறைமுகம் திறந்து வைக்கப்படும்

-பி. முஹாஜிரீன்-

திர்வரும் செப்டம்பர் 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஒலுவில் துறைமுகம் வைபவரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் இத்துறைமுக அபிவிருத்திக்கென கையேற்கப்பட்டு நீண்ட காலமாக நஷ்டயீடு வழங்கப்படாதிருந்த காணிச் சொந்தக்காரர்களுக்கு முற்கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று ஒலுவில் துறைமுக சுற்றுலா விடுதியில் இன்று திங்கட்கிழமை (26) துறைமுகங்கள் அபிவிருத்தி பிரதியமைச்சர் ரோஹித அபே குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.

துறைமுக அபிவிருத்திக்கென கையேற்கப்பட்டு காணிகளை வழங்கியவர்களுக்கு அவர்களது நஷ்டயீட்டுக் கொடுப்பனவில் நில அளவைகள் திணைக்களத்தினால் தீர்மானிக்கப்பட்ட தொகைக்கு அமைவாக முற்கொடுப்பனவாக ஒரு பேர்ச்சஸ் காணிக்கு ரூபா 30.000 வழங்குவதற்கு இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. மிகுதிக் கொடுப்பனவுகளை பின்னர் வழங்குவதற்கும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இம் முற்காடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01ம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இத்துறைமுகம் திறந்து வைக்கப்படவுள்ள நிலையில் கடந்த 11 வருடங்களுக்கு மேலாக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு நஷ்டயீடு வழங்கப்படாமையை கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வையினால் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, துறைமுக அதிகார சபையின் தலைவர் சாலிந்த பெரேரா மற்றும் முப்படை உயரதிகாரிகள் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :