அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான அவசர கூட்டம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவசர கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நாளை இரவு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

நேற்று சனிக்கிழமை இரவு கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு எடுத்த தீர்மானத்தின் பிரகாரமே மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கட்சியின் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்சியின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :