ஆறு மாணவிகளுடன் உடலுறவு கொள்ள ஹோட்டலில் ரூம் போட்ட அதிபர் ஆசாமி கைது.


டலுறவுக்காக தனது பள்ளியில் பயின்ற 14 வயது மாணவிகளில்  6 பேருக்கு ஹோட்டலில் ரூம் போட்ட பள்ளி அதிபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இக் கொடிய சம்பவம், சீனாவின் Hainan மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அதிபராக பணிபுரிந்த Chen என்ற நபரால் நடந்தேறியுள்ளது.

குறித்த சம்பவ தினத்தன்று அம் மாணவிகள் 6 பேரும் வகுப்புக்கு வராததால், அது தொடர்பில் அவ் வகுப்பு ஆசிரியரால், அம் மாணவிகளின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

பெற்ரோர்கள், தமது பிள்ளைகளை மிரட்டி கேட்ட போது, குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதிபர் தம்மை ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்று, உடலுறவுக்கு உட்படுத்தியதாக அம் மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.

இதன் அடிப்படையில், குறித்த அதிபரும், இச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம் மாணவிகள் 6 பேரும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :