கட்டடம் இல்லாமல் மரத்தின் கீழ் கல்வி கற்க்கும் அட்டாளைச்சேனை அந்நூர் மாணவர்கள்.


அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள அட்டாளைச்சேனை அந்நூர் மஹாவித்தியாலயத்தில் மாணவர்கள், இருந்து கல்வி கற்பதற்கு சரியான கட்டிட வசதி இல்லாத காரணமாக வெளியிலும் மரநிழல்களிலும் இருக்க வேண்டிய நிலமை உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் எமது இம்போட் மிரர் இணையத்துக்கு கவலையுடன் தெரிவித்தனர்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒதுக்கியிருக்கும் கட்டிடம் மழை வந்தால் உள்ளே இருக்க முடியாது மழைநீர் உள்ளே வரும், அது போன்று வெயில் காலங்களில் உள்ளே இருக்க முடியாதளவு வெப்பமான நிலைமையும் காணப்படுகிறது, மிகவும் பணிந்த பழைய கட்டடம் மேலே சீட் போடப்பட்டுள்ளதால் இன்னும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது சம்மந்தப்பட்டவர்கள், அரசியல் வாதிகள், இதற்க்கு சரியான வசதி செய்து தருவார்களா என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :