ட்ரூவிஷன் அமைப்பு அலுவலக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு

(எம்.ஐ.முஹம்;மட் பைஷல்)

தேசிய சமாதானப் பேரவை ட்ரூவிஷன் அமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தி வரும் சமாதானத்திற்கான பங்களிப்பு செயற்திட்டத்திற்கமைவாக ட்ரூவிஷன் அமைப்பின் செயற்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஒரு தொகுதி அலுவலக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (13.01.2013) அட்டாளைச்சேனை ட்ரூவிஷன் அமைப்பின் கூட்ட மண்டத்தில் இடம்பெற்றது.

ட்ரூவிஷன் அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான உவைஸ் அப்துல் காதரிடம் தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வுக்கு தேசிய சமாதானப் பேரவையின் உதவி செயற்திட்ட முகாமையாளர் சாந்த லுனுஹேவல, அம்பாறை மாவட்ட வெளிக்கள இணைப்பாளர் எம்.ஏ.றம்ஸி மற்று பல கல்விமான்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :