மூதூர் பிராந்­திய இரா­ணுவ கட்­டளைத் தள­பதி கேர்ணல் விகும் லிய­னகே ரிசானாவின் குடும்பத்துக்கு வீடு கட்டும் பணியில்

ரிஸா­னா­வுக்­காக அனு­தா­பப்­படும் பலரும் அவ­ளது குடும்­பத்­திற்கு உதவி செய்ய முன்­வந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். உல­கெங்­கு­மி­ருந்து அழைப்­புகள் வந்த வண்­ண­மி­ருக்­கின்­றன. உங்­க­ளுக்கு என்ன வேண்டும்? எவ்­வ­ளவு பணம் வேண்டும்? வீடு கட்டித் தரு­கிறோம்.... பிள்­ளை­களைப் படிப்­பிக்க உதவி செய்­கிறோம்.... வேலை­வாய்ப்புத் தரு­கிறோம்.... 

ஆனால் அனைத்­தையும் நிரா­க­ரித்துக் கொண்­டி­ருக்­கிறார் ரிஸா­னாவின் தாய். பிள்­ளையின் பெயரால் நாங்கள் சொகு­சாக வாழ விரும்­ப­வில்லை. இந்தக் குடி­சைக்­குள்­ளேயே ரிஸா­னாவின் நினை­வு­க­ளோடு செத்துப் போக விரும்­பு­கிறேன் என்­கிறார் அவர்.

ஆனாலும் மூதூர் பிராந்­திய இரா­ணுவ கட்­டளைத் தள­பதி கேர்ணல் விகும் லிய­னகே உட­ன­டி­யா­கவே செயலில் இறங்­கி­விட்டார். ரிஸா­னாவின் குடும்­பத்­திற்­கென வீடு ஒன்றை நிர்­மா­ணிப்­ப­தற்­கான பணி­களை அவர் தொடக்கி வைத்­தி­ருக்­கி­றார்.

ரிஸா­னாவின் குடி­சை­யி­லி­ருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள அவர்­க­ளுக்குச் சொந்­த­மான வளவில் வீட்­டுக்கு அத்­தி­வாரம் இடு­வ­தற்­கான வேலை­களில் இரா­ணுவ வீரர்கள் ஈடு­பட்டுக் கொண்­டி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது. வீடு கட்டத் தேவை­யாக கற்கள், மண் என்­ப­னவும் அங்கு கொட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. கூடி­ய­வி­ரைவில் வீட்டை நிர்­மா­ணித்துத் தரு­வ­தாக அவர் உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

இதற்­கி­டையில் ஜனா­தி­பதி ஒரு வீட்டை ஒதுக்­கி­யுள்­ள­தா­கவும் சவூதி தன­வந்தர் ஒருவர் வீடு கட்­டப்­போ­வ­தா­கவும் பல தக­வல்கள் வெளி­வந்­த­வண்­ண­மி­ருக்­கின்­றன. இவற்றில் எவை நடந்­தேறப் போகின்­றன என்­பதைப் பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும்.

எம்.பி.எம்.பைறூஸ்
-வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :