மனித உரிமைகள் தொடர்பில் சில மேற்கு நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை தலைவர் ஹக்கீமிடன் தெரிவிப்பு.




ஈரான் நீதிதுறைத் தலைவர் ஆயதுல்லாஹ் சாதிக் அமோலி லர்ஜானி நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (23) தெஹ்ரானில் இடம்பெற்றுள்ளது.

அதன் போது மனித உரிமைகள் தொடர்பில் சில மேற்கு நாடுகள் இரட்டை வேடம் பூண்டுள்ளதாக ஈரானிய நீதித்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரானும், இலங்கையும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச அரங்குகளில் ஒருமித்த நிலைபாடுகளை கொண்டிருந்ததை அமைச்சர் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
முனித உரிமைகள், சட்டமுறைமைகள், அரசியல் விவகாரம் என்பன தொடர்பில் விரிவான  உரையாடல் இடம்பெற்றுள்ளது.

ஈரானின் நீதியமைச்சசர் செய்யித் மொர்தெஸா பக்திஅரி மற்றும் அந் நாட்டு நீதித்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட இவ்வுரையாடலின் போது பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமுமான எம்.ரி.ஹசனலி, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மான் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்  







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :