Share on
அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட 14 சங்கங்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் 16ஆம் திகதி கல்வி அமைச்சுடன்
நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த காரணத்தினால் எதிர்வரும் 4ஆம் திகதி சுகயீன போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த சுகயீனப் போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட 14 சங்கங்களும் கூட்டாகச் சேர்ந்து வெளியிட்டு ள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவை பின்வறுமாறு;
'அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட, அதிபர் ஆசிரியர்களின் சம்பள திட்டத்திற்கு அமைவாக நிலுவையுடனான சம்பளத்தினை உடன் வழங்கு.அதிபர் ஆசிரியர்களின் பதவி உயர்வுகளை தாமதமின்றி வழங்கு, நிலுவைச் சம்பளம், இடர்கடன், வீடமைப்புக் கடன் முதலான அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கு போதிய நிதியை ஒதுக்கீடு செய், மொத்த தேசிய உற்பத்தியின் 6 வீதத்தினை கல்விக்காக ஒதுக்கீடு செய்வதன் மூலம் இலசவ கல்விக்கான பாதுகாப்பினை உறுதிசெய், கல்வித்துறையை அரசியல் மயப்படுத்துவதை உடன் நிறுத்து, ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்து, போன்ற கோக்ரிக்கைகள் முன்வைத்தே இந்த சுகயீன போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக' அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment