நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினர் சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம் ACMC யில் இணைந்தார்.

பாறுக் ஷிஹான்-

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிமின் சகாவும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம் தலைமையிலான குழுவினர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் மயில் சின்னம் இலக்கம் 5 இல் வேட்பாளராக போட்டியிடும் நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீரை ஆதரித்து செவ்வாய்க்கிழமை(23) இரவு இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவினை பகிரங்கமாக தெரிவித்து கொண்டுள்ளார்.


மேலும் அங்கு கருத்து தெரிவித்த நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம்

பிரதேச அபிவிருத்தி இளைஞர்கள் வேலைவாய்ப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நல்ல முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்.

எமது தவிசாளர் நிந்தவூர் பகுதியை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் செய்ய முடியாத வேலைகளை செய்து அழகு படுத்தியுள்ளார்.

எனவே அனைத்து மக்களும் இம்மக்கள் சேவகனை எதிர்வரும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசாட் பதியுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் நிந்தவூர் பிரதேச இளைஞர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -