சட்டவிரோதமான முறையில் மாடு அறுத்த இருவர் சவளக்கடை பொலிஸாரால் கைது

பாறுக் ஷிஹான்-
ம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாளம்பைகேணி 2 பிரதேசத்தில் வியாழக்கிழமை (9) நண்பகல் பிரதேச சபை மற்றும் பொது சுகாதார பரிசோதகரின் அனுமதியின்றி வீடொன்றில் வைத்துமாடு ஒன்று வெட்டப்படுவதாக சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகலை அடுத்து நிலையபொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் தலைமையிலான பொலிசார் குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

இதன் போது குறித்த வீட்டில் இருந்த இரு சந்தேக நபர்களும் 35 கிலோ நிறையுடைய மாட்டிறைச்சியும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் இருவரையும் இ இறைச்சியையும் கல்முனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அண்மைக்காலமாக போயா தின விடுமுறை காலங்களில் சட்டவிரோதமாகஇறைச்சிக்காக மாடுகள் அறுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாடு நாளை பூரண தினமாகையால் இரகசியமாக இறைச்சி விற்பனை செய்வதற்காகவே அறுக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -