ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரான அன்சில் உடனடி நீக்கம்!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் உறுப்பினரான அன்சில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்பீட உறுப்பினர் அந்தஸ்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்றிரவு (28) அதன் தலைமையகமான தாருஸ் ஸலாத்தில் கட்சித் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலமுனை அமைப்பாளர் உட்பட அனைத்துப் பதவிகளிலிருந்தும்  அன்சில் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, வெற்றிடமாகவுள்ள கட்சியின் தவிசாளர் பதவிக்கு எஸ்.டி.எல். மஜீதை நியமிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -