கொழும்பு-14, ஸ்ரேஸ் வீதியில் அமைந்துள்ள “மினி அப்பலோ” வைத்தியசாலையின் ஐந்தாவது மாடியில் மாலை 5 மணியளவில் ஆரம்பமான இப்பயிற்சிப் பட்டறையில், தெலுங்கு மொழியைக் கற்றுக்கொள்வதிலும் அதன் பயன்பாட்டை மேம்படுத்துவதிலும் ஆர்வமுள்ள பலர் கலந்துகொண்டனர்.
ஆந்திரப் பிரதேசத்திலிருந்து வருகை தந்த சுரவரம் பிரதாபரெட்டி தெலுங்கு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தெலுங்கு தொண்டர் ஆசிரியர் யேரா நாயுடு ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டு, தெலுங்கு மொழியின் அடிப்படை அம்சங்கள், மொழிப் பயன்பாடு மற்றும் கற்றல் முறைகள் தொடர்பில் பயிற்சிகளை வழங்கினர்.
அகில இலங்கை தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம். அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனர் ராதாமேத்தா மற்றும் “மினி அப்பலோ” வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் W.U. நாயுடு ஆகியோர் கௌரவ அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
இப்பயிற்சிப் பட்டறை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தினமும் மாலை 4.00 மணிக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது. தெலுங்கு மொழியைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
தெலுங்கு மொழியின் பாரம்பரியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதுடன், மொழியைக் கற்றுக்கொள்வதற்கான ஆர்வத்தை மேலும் வளர்க்கும் வகையில் இப்பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது.

0 comments :
Post a Comment