சட்டமுறனான சுற்றுச் சந்தி (Roundabout) : மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல்.



நூருல் ஹுதா உமர்-
ம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமுறனான சுற்றுச் சந்தி கட்டுமானத்திற்கு எதிராக சம்மாந்துறைப் பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.மாஹிர் அவர்களினால் தொடரப்பட்ட வழக்கு நேற்று (16.12.2025) சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜெ. ரஞ்ஜித் குமார் முன்னிலையில் ஆதரிப்பதற்காக அழைக்கப்பட்டது.

நகர அபிவிருத்திச் அதிகார சபைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் படி "அபிவிருத்திப் பிரதேசமாக" வர்த்தமானியின் மூலம் பிரகடனம் செய்யப்பட பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைகள் யாவும் குறித்த பிரதேசம் அமையப்பெற்றுள்ள உள்ளூராட்சி அதிகார சபையின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்படவேண்டும்.

இந்நிலையில், மேற்படி சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஆண்டியர் சந்தியில் சம்மாந்துறை பிரதேச சபையின் அனுமதியைப் பெறாமல் பல்வேறு தொழிநுட்பக் குறைபாடுகளோடு வீதி அபிவிருத்தி அதிகார சபையானது சட்டமுரனாக மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி தொடரப்பட்டுள்ள குறித்த வழக்கில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப்பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், நிறைவேற்றுப் பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரரான சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல். மாஹிர் சார்பில் கெளரவ மன்றில் முன்னிலையான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட சமர்ப்பணத்தைக் கேட்டறிந்த மன்றானது எதிர்வரும் 06.01.2026 யில் மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் மன்றில் தோன்றுவதற்கான அறிவித்தலை அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளது.

ஆண்டாண்டு காலமாக புரிந்துணர்வோடும் இன ஐக்கியத்துடனும் வாழும் இனக்குழுக்களுக்கு மத்தியில் சம்மாந்துறை ஆண்டியர் சந்தியை மையப்படுத்தி பகையுணர்வையும் வன்மத்தையும் தூண்டும் நிகழ்வுகள் அண்மைக் காலங்களாக இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :