இந்த இரத்ததான முகாம் எதிர்வரும் 27.12.2025 (சனிக்கிழமை) அன்று காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை, சாய்ந்தமருது ஜனாஸா தலைமைக் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
உயிர்காக்கும் இந்த உன்னத பணியில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரத்ததானம் செய்வதன் மூலம் நோயாளிகள், விபத்துக்குள்ளானவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுவோர் பலரின் உயிர்களை காக்க முடியும்.
இதனை முன்னிட்டு, “ஓர் உயிரை வாழவைத்தவர் எல்லா உயிர்களையும் வாழவைத்தவர் போல் ஆவார் (ஹதீஸ்)”
என்ற நபிவாக்கியத்தையும் நினைவுகூர்ந்து, தகுதியுடைய அனைவரும் இந்த இரத்ததான முகாமில் கலந்து கொண்டு தங்களது இரத்தத்தை தானம் செய்து மனிதாபிமான சேவையில் பங்குகொள்ளுமாறு அமைப்பாளர்கள் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளனர்.
இரத்ததானம் வழங்க விரும்புவோர் முன்பதிவிற்காக கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம்:
· அஸ்வர் – 077 480 4316
· நஸீர் – 077 696 8676
· ஜெமீன் – 077 900 0771
இந்த சமூகநல சேவை முயற்சிக்கு பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :
Post a Comment