வெள்ள நிவாரணப் பணியில் அகில இலங்கை கம்பன் கழகத்தின் மனிதாபிமான பங்களிப்பு



அஷ்ரப் ஏ சமத்-
நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிக்கும் நோக்கில், அகில இலங்கை கம்பன் கழகத்தின் சார்பில் அதன் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் வழங்கிய நிதி நன்கொடை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களிடம் கடந்த (15) ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்நிதியைத் தொடர்ந்து, (16) ஆம் திகதி மாலை பழைய எல்பிட்டிய கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சகல சமுகத்தினருக்கும் நிவாரண உதவியாக அந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பணிகள் இன, மத பேதமின்றி மனிதாபிமான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் அவசர தேவைகளை நிறைவேற்றும் வகையில் உதவிகள் வழங்கப்பட்டன.

அகில இலங்கை கம்பன் கழகத்தின் இந்த முயற்சி சமூக ஒற்றுமையையும், அனர்த்த நேரங்களில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :