கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் என் மணிவண்ணனுக்கு இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் கௌரவம்...!



நூருல் ஹுதா உமர்-
கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாகச் சேவையின் விசேட தர அதிகாரியான என் மணிவண்ணன் அவர்களை வாழ்த்தி வரவேற்று இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கம் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளது.

இந்த நிகழ்வு (16) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய பிரதிப் பிரதம செயலாளர் நிர்வாகம் அவர்களை வாழ்த்தி வரவேற்கும் முகமாக நேரடியாக சென்ற தொழிற்சங்க நிர்வாகியான இலங்கை அரசாங்க பொது சேவைகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ சிபான் ஜே பி தலைமையிலான தொழிற்சங்க உறுப்பினர்களால் பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது, பிரதிப் பிரதம செயலாளர் - நிருவாகம் அவர்களுக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட தொழிற்சங்க பொது செயலாளர் ஏ சிபான், அரச சேவையின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையில் கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் நேர்மையாக செயல்பட்ட சிரேஷ்ட தர அதிகாரிக்கு பொறுப்பு வாய்ந்த பதவி கிடைத்துள்ளமையை இட்டு எமது தொழிற்சங்கம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :