ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் ஆலோசனையின் பேரில் நிதி பொருளாதார மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் சிறுவர் மகளிர் விவகார அமைச்சின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கான இலவச அரிசி வழங்கும் ஆரம்ப நிகழ்வானது மன்னார் நகர பிரதேச செயலாளர் திரு.எம். பிரதீபன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மன்னார் நகர பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட "பெரியகடை " சன சமூக நிலையத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கெளரவ மனுஷ நாணயக்கார, இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணகேஸ்வரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் பங்கேற்போடு இந்நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது.
0 comments :
Post a Comment