காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூன்று மில்லியனுக்கு மேல் நிதி உதவி


நூருல் ஹுதா உமர்-
ல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்களின் நிதிப்பங்களிப்பில் ரூபா 3,128,500/- நிதியினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (22) கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.
வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் குறித்த தொகைக்கான ஆவணத்தை கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ் அவர்களிடம் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்), உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் முன்னிலையில் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எம்.எச். ஜாபீர், உதவிக்கல்வி பணிப்பாளர்களான யூ.எல். றியால், எஸ். சஞ்சீவன், கல்முனை வலய பாடசாலை அதிபர்கள், பிரதி உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :