பட்டிருப்பு தேசிய பாடசாலை மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் தேசிய ரீதியில் சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டக்களப்பு, பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை -) களுவாஞ்சிகுடி மாணவர்கள் இளம் ஆராய்ச்சியாளர் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் வெற்றி பெற்றதுடன் கல்வி அமைச்சினால் முதல் தடவையாக நடாத்தப்பட்ட ஆராய்ச்சியாளர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு NextGen Insights நாளிதழில் பட்டிருப்பு தேசிய பாடசாலையின் பெயரையும் பொறித்துள்ளனர்.


பாடசாலை மாணவர்களான ம.தசாப்தன், தி.சேம், சு. சுமித்ரா, த.வேதுஜா, கோ.சஸ்மிகா, அ.சஜித், ர.கேனுசாந், வ.பத்மலோஜனி, ச.திருத்திகா, சி.தரண்யா மற்றும் வழிகாட்டிய பாடசாலை ஆசிரியர்களான செல்வராஜா தேவகுமார், தங்கராசா யுதர்சன் ஆகியோருக்கு அதிபர் உள்ளிட்ட பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பதினைந்து பாடசாலைகளில் தமிழ்மொழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு பாடசாலை பட்டிருப்பு தேசிய பாடசாலை - களுவாஞ்சிகுடி என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :