கல்முனை அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் U.L.A.றஹ்மான் நாபீர் பௌண்டேஷனின் இணைவு



பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களுக்கு நாளுக்கு நாள் பெருகும் மக்கள் ஆதரவும் ஏனைய கட்சி முக்கியஸ்தர்கள் இணைவும்

நாபீர்‌ பவுண்டேஷனின் சமூக செயற்பாடுகள்‌ மற்றும்‌ அரசியல் ‌போக்கினை தெளிவாக புரிந்து கொண்டு நாளுக்கு நாள் அதிகளவான பொதுமக்கள் நாபீர் பவுண்டேஷன் தலைவர்‌ பொறியியலாளர் கலாநிதி உதுமான்கண்டு நாபீர் அவர்களோடு‌ இணைந்து செயற்படுவதற்கு தயாராகி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் கல்முனைக்குடி 12 ம் வட்டாரம் அகிலஇலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னாள் வேட்பாளர் U.L.A.றஹ்மான் அவர்கள் நாபீர் பௌண்டேஷனின் கொள்கையையும் சமூகபணியையும் ஏற்று

உதுமான் கண்டு நாபீர் அவர்களின் இணைப்புச் செயலாளர் பாயிஸ் கரீம் அவர்களின் முன்னிலையில் இணைந்து கொண்டார்.

பொறியியலாளர் உதுமான் கண்டு நாபீர் அவர்கள் எதிர்வரும் தேர்தலில் களமிறங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டதுடன் பொறியியலாளர் உதுமான் கண்டு நாபிர் அவர்களுக்கு தங்களது முழுமையான ஆதரவினை தொடர்ச்சியாக வழங்குவதாகவும் U.L.A.றஹ்மான் அவர்கள் இணைப்புச் செயலாளர் பாயிஸ் கரீம் அவர்களிடம் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :