மின்சார உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் நீரின் கொள்ளளவு தற்போது 20 சத வீதமாக குறைந்துள்ளதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
ரன்தெனிகல நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 8.1 சத வீதமாகவும், விக்டோரியா நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 27 சத வீதமாகவும், சமனலவெவ நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 1.9 சத வீதமாகவும் குறைந்துள்ளது.
இந் நிலைமையில் நாட்டின் மின்சார தேவையில் 80 சத வீதம் நிலக்கரி மற்றும் அனல்மின்சாரம் மூலம் வழங்கப்படுகின்றது.
இதேவேளை 1100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சாரசபைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments :
Post a Comment