சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்ட ஜனாப். அ.ற. முஹம்மது ஜாபிர் அவர்கள் ( காலம்சென்ற ஏ.ஏ. றஸ்ஸாக் மெளலவி அவர்களின் மூத்த புதல்வர்) அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் விசேட தரத்திற்கு ( Special Grade) 2019.07.01 ஆம் திகதியிலிருந்து செயற்படும் வண்ணம் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
1999 இல் அரச கரும மொழித் திணைக்களத்தின் பட்டதாரி மொழிபெயர்ப்பாளராக (தமிழ் /ஆங்கிலம்) பதவியேற்று 2001 ஆம் ஆண்டு வரை கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றினார்.
இன விவகார மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிலும்,
கனிப்பொருள், மூலவள அபிவிருத்தி அமைச்சிலும் நீதி , சட்ட மறுசீரமைப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவிலும் நிவாரணம், புனர்வாழ்வு நல்லிணக்க அமைச்சிலும் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றியுள்ளார்.
பொது நிருவாக உள் நாட்டு அலுவல்கள் அமைச்சின் அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவையின் தரம் - 1 போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து 2005 ஆம் ஆண்டிலிருந்து
நிந்தவூர் பிரதேச செயலகத்தில் மிக நீண்ட காலமாக அரசாங்க மொழிபெயர்ப்பாளராக ( தமிழ் / ஆங்கிலம்) தரம் - 1 இல் கடமையாற்றியுமுள்ளார்.
அத்துடன், இவர் நீதி அமைச்சின் சத்தியப்பிரமாணம் செய்த மொழிபெயர்ப்பாளர் (தமிழ் / ஆங்கிலம்) ( Sworn Translator) என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் தற்பொழுது கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment