75ஆவது சுதந்திர தினம் சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் அனுஷ்டிப்பு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
லங்கை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தினம் சாய்ந்தமது அல்-ஹிலால் பாடசாலையில் இன்று (04) சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் யூ.எல். நஸாரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

சுதந்திர தினத்தையொட்டி பாடசாலையில் ஆரம்ப கல்வி மாணவர்களின் சித்திரக் கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்த சாய்ந்தமருது கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.எம்.ஏ. மலீக் கண்காட்சி கூடத்தின் நாடாவை வெட்டி வைத்தும் தேசியக்கொடியையும் ஏற்றியும் வைத்தார்.

இதன் போது மாணவர்களால் தேசிய வீரர்கள் பற்றி உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில், பிரதி அதிபர் நுஸ்ரத் பேகம், உதவி அதிபர் ஐனூல் மர்சுனா உட்பட பகுதித் தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :