ஒரு நாடாக கடந்த வருடம் முழுவதும் கேட்ட மற்றும் எதிர்கொண்ட பல செய்திகள் நல்லதை விட கெட்டவையாகவே இருந்தன. தூர நோக்கு இல்லாத ஆட்சி முறையால் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமைக்கு ஆளாகிய படுமோசமான ஆண்டாகவும்,இந்த நாட்டில் பொதுமக்களின் தீர்க்கமான வெற்றி எழுச்சிக்கான தனித்துவமான ஆண்டாகவும் 2022 ஆம் ஆண்டை குறிப்பிட முடியும்.இந்த உன்னத எழுச்சிக்கு நாமும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
ஒரு நாடாக, நாம் பல சவால்களுடன் 2023 ஆம் ஆண்டை எதிர்கொள்கிறோம்
நாட்டின் தற்போதைய ஆட்சியை மீட்சியாக மாற்றுவதற்கான முன்னணி நடவடிக்கைகள் இந்த வருடத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். தோல்வியடைந்த ஆட்சியின் துன்பத்தை இந்நாட்டு மக்கள் இனியும் அனுபவிக்க முடியாது என்பதே யதார்த்தம்.
எனவே, நாட்டை புதிய பாதையில் கொண்டு செல்லக்கூடிய மற்றும் கொண்டு செல்ல வேண்டிய வேலைத்திட்டங்கள் பற்றி புதிதாக நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு நாட்டின் உந்து சக்தி மக்களின் இறையாண்மை என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு கூர்ந்து அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சஜித் பிரேமதாஸ,
இலங்கைப் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும்,
ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும்.
0 comments :
Post a Comment