பொட்டும் பூவும் எப்படி ஓர் இனத்தின் அடையாளமோ முக்காடும் ஓர் இனத்தின் அடையாளமாகும்



பாயா அணிந்து பாடசாலைக்கு வர வேண்டாமென திருகோணமலை ஷண்முகா வித்தியாலய அதிபர் மாணவர்களை பயன்படுத்தி மேற்கொண்ட இனவாத எதிர்ப்பு நடவடிக்கையானது மனிதபிமானமற்ற செயற்பாடாகும்!

மனித உரிமையை மட்டுமல்ல மனிதத்தையே மீறிச் செயற்பட்டு பொய்கூறி இனங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த முனையும் கல்விச்சமூகம் தங்களை ஒரு சுய விசாரணைக்குட்படுத்தி கொள்ள வேண்டும்.

பொட்டும் பூவும் எப்படி ஓர் இனத்தின் அடையாளமோ முக்காடும் ஓர் இனத்தின் அடையாளம். இன்னொரு இனத்தின் அடையாளத்தை மறுக்க முனையக் கூடாது.

வட கிழக்கில் வலுப்பெற்று வரும் தமிழ் முஸ்லிம் உறவு இத்தகைய கீழ் மனநிலைகொண்டவர்களின் செயற்பாடுகளால் பலவீனப்பட்டு விடக்கூடாது. ஒரு மொழி பேசும் தமிழ் முஸ்லிம் உறவுகள் தமக்கான உரிமைகளை தாமே பரஸ்பரம் மறுத்துக்கொள்வதன் மூலம் பேரினத்தின் நசுக்குதலுக்கு மிக விரைவாக தாம் உட்பட்டுவிடுவோம் என்பதை மறக்கக் கூடாது.

இன்று முக்காடை கழற்ற நீங்கள் முயற்சித்தால் அது முட்டாள் தனம்
என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பாத்திமா பஹ்மிதா நாங்கள் உங்களது பக்கமே உள்ளோம்.
In solidiarity with Fathima. Fahmidha
நியாயம் வெல்லட்டும்!


எம்.ஜ.எம்.நவாஸ்
மனித உரிமை ஆர்வலர்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :