பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு



ஏ.எல்.றியாஸ்-
பொத்துவில் பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.யூ.அப்துல் சமட்டின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அல்-ஹுதா வித்தியாலயம் ஆகிய தடுப்பூசி வழங்கும் நிலையங்களில் நேற்று (21) தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக்கொள்வோருக்குமே குறித்த நிலையங்களில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை வைத்திய அத்தியட்சகர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :