திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபருக்கு பதவி உயர்வு



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய சமன் தர்சன பாண்டிகோராள கரும்பு, சோளம்,மரமுந்திரிகை, மிளகாய், கருவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு போக பயிர்ச்செய்கை அபிவிருத்தி,அதனோடு இணைந்த கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவிடமிருந்து தமக்கான நியமனத்தை பெற்றுக்கொண்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை இவர் தம் கடமைகளை இராஜாங்க அமைச்சில் பொறுப்பேற்கவுள்ளார்.
கடந்த 2020.10.26 ம் திகதி திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையேற்றதுடன் குறுகிய காலத்தில் மாவட்ட மக்களின் பல்வேறு தேவைகளை விசேட கவனம் செலுத்தி செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :