சாய்ந்தமருதில் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வு சாய்ந்தமருது - 02 ஆம் கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.எம்.றம்ஸா தலைமையில் இன்று (14) காலை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீமின் வழிகாட்டவில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கொடுப்பனவுகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் சமுர்த்தி உதவி முகாமையாளர் கலாநிதி ஏ.எம்.எம். றியாத் உள்ளிட்ட சமுர்த்தி சங்கங்களின் பிரதிநிதிகள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவுகளாக சாய்ந்தமருது பிரதேசத்தில் 2842 சமுர்த்தி பயனாளிகளுக்கு 71 லட்சத்தி 79 ஆயிரத்து 400 ரூபா கொடுப்பனவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :