சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளின் ஆடையுரிமை மீறலை விசாரிக்க கிழக்கின் கேடயம் ஜனாதிபதியிடம் கோரல்.



நூருள் ஹுதா உமர்-
னாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் 74 வது சுதந்திரதின உரையில் இந்தநாட்டில் தனிநபர்களினதும் இனம் மதம் ரீதியிலான உரிமைகளை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் அவை இந்த நாட்டில் நடைபெறுகின்றதா? எனும் சந்தேகம் அண்மைய நாட்களில் நடைபெற்ற சம்பவங்களை பார்க்கும் போது தோன்றுகிறது.

ஆனால் திருகோணமலை சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாவினையும் காட்சட்டையினையும் கழற்றி வைத்துவிட்டே வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவதாக திருகோணமலை கள விஜயத்தின்போது கிழக்கின் கேடயத்தினர் அறிந்துகொண்டதாகவும் இதுதொடர்பில் உண்மைத்தன்மையினை கண்டறிந்து தவறு இழைத்தவர்களுக்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கிழக்கின் கேடயம் சார்பில் தலைவர் எஸ் எம் சபீஸ் கையெழுத்திட்ட எழுத்துமூல கடிதம் அரசின் உயர்மட்டத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளது

இந்த பாடசாலைக்கு அங்கு காணப்படும் ஏனைய பாடசாலைகளையும்விட அதிகளவான பௌதிகவளங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும் இவ்வாறான மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்ககோரிய கடிதம் ஜனாதிபதி, கல்வியமைச்சர், ஆளுநர், மாகாண கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், திருகோணமலை சண்முகா பாடசாலை ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :