தேசிய காங்கிரஸ் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு சுழட்சி முறையில் Y.S.M. சிஹான் நியமனம்!



டந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸின் சார்பில் போட்டியிட்ட Y.S.M. சிஹான் அவர்கள் மூதூர் பிரதேச சபை உறுப்பினராக தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் A.L.M. அதாவுல்லாஹ் அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் சிரேஷ்ட பிரதி தலைவர் வைத்தியர் A. உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் Dr. Y.S.M. ஸியா, மூதூர் பிரதேச சபையின் தேசிய காங்கிரஸின் முன்னால் உறுப்பினர்களான J.M. சுக்ரி, S.T. ஜஹ்பர், திருகோணமலை மாவட்ட தேசிய காங்கிரஸின் பொருளாளர் S. நபீர் (பாவா ஏஜென்சி) ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைக்கு கிடைத்த ஆசனத்தை வருடம் ஒருவருக்கு என்ற கௌரவ தலைவர் அல் ஹாஜ் A.L.M. அதாஉல்லா அவர்களின் வாக்குறுதிக்கு அமைய மூதூர் பிரதேச சபை உறுப்பினராக இருந்துவந்த தோப்பூர் பிரதேசத்தை சேர்ந்த S.T. ஜௌபர் அவர்கள் அண்மையில் தனது பதவியை தாமாக முன்வந்து இராஜினாமா செய்திருந்தார்.
அந்த வெற்றிடத்தை நிரப்ப புதிய உறுப்பினராக Y.S.M. சிஹான் அவர்கள் மூதூர் பிரதேச சபைக்கு ஏற்கனவே நியமிக்கப்பட்டு இன்று கிழக்கு வாசலில் வைத்து சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :