அண்மையில் உலக சாதனை, ஆசிய சாதனை ஆகியவற்றை நிலைநாட்டிய நிந்தவூர் முதலாம் பிரிவினை சேர்ந்த அனத் ஜிதா என்ற சிறுமியை பாராட்டி பஸ்லி ரூமி அமையம் கொழும்பில் கெளரவித்ததுடன் உலக சாதனை பதக்கங்களையும் உத்தியோகபூர்வமாக அணிவித்து கெளரவித்தது.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒத்துழைப்புடன் பஸ்லி ரூமி அமையம் ஒழுங்கு செய்து நடாத்திய இசைத்தென்றல் நிகழ்ச்சி கொழும்பு ஆனந்த சமரக்கோன் மண்டபத்தில் அண்மையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற செயலாளர் அசோகா எல்லஹொட, கொழும்பு மாநகர பிரதிமேயர் ஏ.ஐ.எம்.இக்பால், தொழிலதிபர் பஸ்லி ரூமி உட்பட முக்கிய பிரமுகர்கள் பலர் இணைந்து வெளிநாட்டில் இருந்து அனுப்பப்பட்ட உலக சாதனை பதக்கங்கள், நினைவுச்சின்னங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக சிறுமிக்கு அணிவித்தனர்.
மேலும் இதன்போது ஏற்பாட்டுக் குழுவினரால் இச்சிறுமிக்கு பொன்னாடை போற்றி கௌரவித்ததுடன் பதக்கம், கிண்ணம் ஆகியன வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாஸில், ரஜனி இணைந்து வழங்கிய வீணஸ் இசை குழுவினரின் இசை தென்றல், இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் சமூக சேவையாளர்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment