சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குள் நுளம்புகளின் பெருக்கம்!



எம்.எம்.ஜெஸ்மின்-
ம்பாறை மாவட்டத்தில் அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட விளினையடி , செந்நெல் கிராமம் , இஸ்மாயில்புரம் , வளத்தாப்பிட்டி , மலையடிக்கிராமம் , மல்வத்த , மஜீட்புரம் ஆகிய கிராமங்களில் நிர் தேங்கி நிற்பதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

வடிகான்களிலும் , வெற்று வளவுகளிலும் நீர்தேங்கி நிற்பதாலும் , வளவுகளில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாலும் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் பரவக்கூடிய நிலையொன்று தோன்றியுள்ளது.
இப்பிரதேசத்தில் கால்நடை வளர்ப்போர் தமது வீடுகளில் கொட்டில் அமைத்து கால்நடைகளை பராமரிப்பதால் இவற்றின் கழிவுகளிலிருந்தும் நோய்கள் பரவக்கூடிய நிலமை உருவாகி வருகின்றது.

இவ்விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் விழப்பாக இருப்பதோடு நீர் தேங்கி நிற்கும் இடங்களை துப்பரவு செய்து சுகாதாரமான நிலமையை பேணுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :