மட்டு. அம்பாறை விஞ்ஞான ஒன்றியத்தின் பரிசளிப்புவிழா



வி.ரி.சகாதேவராஜா-
ட்டு. அம்பாறை விஞ்ஞான ஒன்றியம் மற்றும் 15ம் கிராமம் பொது நூலகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த பரிசளிப்பு விழா நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

15ம் கிராமம் பொது நூலகத்தின் தலைவர் கே.துஷ்ஷந்தன் தலைமையில் மட்டு அம்பாறை விஞ்ஞான ஒன்றியத்தின் தலைவர் கே.கோபிநாத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதிகளாக நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் கௌரவ அ.ஆனந்தன் ஆகியோர் கலந்துசிறப்பித்தனர்.

விசேட அதிதிகளாக நாவிதன்வெளி இலங்கை வங்கி முகாமையாளர் கே.சசிதரன் ,வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் என்.பிரபாகர் ,7ம் கிராமம் நாமகள் வித்தியாலய அதிபர் எம்.இராஜகோபால் மற்றும் சண்முகா வித்தியாலய அதிபர் ஈ.முரளிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வாசிப்பு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற 33 மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :