கிழக்கின் பழம்பெரும் கழகமாம் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்றுமுன்தினம் கழகதலைமையகத்தில் கழகத்தலைவர் கி.சசிகரபவான் தலைமையில் நடைபெற்றது.
அதிதிகளாக கழகப்போசகர்களான உத்தரவுபெற்ற நிலஅளவையாளர் வே.இராஜேந்திரன், உதவிக்கல்விப்ணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் மாலைசூட்டி வரவேற்கப்பட்டனர்.
கழகச்செயலாளர் வெ.உதயகுமரன் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க, நிதிச்செயலாளர் என்.சுபதீபன் கடந்தகால நிதிஅறிக்கையை சமர்ப்பித்தார்.
இதன்போது 2022ஆம் ஆண்டுக்கான புதியநிருவாக சபையும் தெரிவுசெய்யப்பட்டது. புதிய தலைவராக வெ.அருட்குமரன், செயலாளராக எஸ்.கிருஷாந்த் ,பொருளாளராக எ.பிரேமானந்த் உள்ளிட்ட புதிய நிருவாகம் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டது. மாலையில் ஒன்றுகூடலும் கௌரவிப்பும் இடம்பெற்றது.
0 comments :
Post a Comment