மாணவி தார்ஷிக்காவை போன்ற சாதனையாளச்களின் ஒத்துழைப்புக்கள் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அவசியம்.-உபவேந்தர் றமீஸ்


சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்ககழகத்தில் எதிர்காலத்தில் மருத்துவப் பீடம் அமைகின்ற போது தர்ஷிக்காவைப் போன்ற சாதனையாளர்களின் ஒத்துழைப்புக்கள் அவசியம் என பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தெரிவித்தார்

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழா நிகழ்வின்போது 13 தங்கப் பதக்கங்களை பெற்று சாதனை படைத்த அக்கரைப்பற்றினைச் சேர்ந்த மருத்துவர் தணிகாசலம் தர்ஷிகாவினை கௌரவிக்கும் நிகழ்வு (27) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே உபவேந்தர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ், எதிர்காலத்தில் இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடம் அமையப்பெற வேண்டியதன் அவசியத்தினைச் சுட்டிக்காட்டியதுடன் இவரைப் போன்ற சாதனையாளர்களின் ஒத்துழைப்பு அதற்கு அவசியமானது எனவும் குறிப்பிட்டார். இந்தப் பிராந்தியத்திலுள்ள உயர் கல்வி நிறுவனங்களுள் ஒன்று என்றவகையில் தர்ஷிக்கா போன்ற சாதனையாளர்களை கௌரவிப்பதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மகிழச்;சியுறுவதாகவும் உபவேந்தர் மேலும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதிவாளர் எச்.அப்துல் சத்தார், பல்கலைக்கழக கணக்காய்வாளர் டபிள்யூ.ஏ.டி.ரஞ்சனி, உபவேந்தர் காரியாலய உதவிப் பதிவாளர் எம்.இஸட்.எம்.றிஸான் உட்பட தர்ஷிக்கா அவர்களின் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக உபவேந்தரின் அழைப்பின்பேரில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்திருந்த சாதனை மாணவி தர்ஷிகாவுக்கு பல்கலைக்கழக நிருவாகம் பொன்னாடை போர்த்திக் கௌரவமளித்தது. இதன்போது தர்ஷிக்காவுக்கான நினைவுச் சின்னத்தினை உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் வழங்கி வைத்தார்.

சாதனை மாணவி தர்ஷிக்கா அவரைக் கௌரவித்த பல்கலைக்கழக உபவேந்தருக்கு நன்றி கூறியதுடன் தனது சாதனை அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தமது குடும்பம், ஆசிரியர்கள், நல்ல நண்பர்கள், விடா முயற்சி என்பன தனது சாதனைக்கு வித்திட்டதனையும் அவர் நினைவுகூர்ந்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :